நெடுஞ்சாலைகளின் கட்டுமானப் பணிகள் வழமைப் போல இடம்பெறும்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் நாடு முழுவதும் வீதி மற்றும் நெடுஞ்சாலைகளின் கட்டுமானப் பணிகள் வழமைப் போல இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தெருக்கள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

வீதி மற்றும் நெடுஞ்சாலைகளின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தங்கள் பணியாளர் அடையாள அட்டையை பாஸாக பயன்படுத்தி பணிக்கு வருகை தரலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.