யாழில் 64 பேர் உட்பட வடக்கில் மேலும் 114 பேருக்குக் கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் 114 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 687 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 64 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 23 பேருக்கும், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 16 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 06 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் 02 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவரும், இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவரும், பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.