லொக்டவுன் காலத்தில், விமான நடவடிக்கைகளை திறமையாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

நாடு முடங்கப்பட்டு உள்ள காலத்தில் விமான நிலையங்கள் மற்றும் விமானங்களின் செயல்பாட்டைத் தொடருமாறு ஜனாதிபதி சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதிலும், இலங்கை விமான நிலையங்களின் செயல்பாட்டை சீர்குலைக்க அனுமதிக்கக் கூடாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் மக்கள் விமான நிலையங்களுக்குச் செல்வதற்குத் தேவையான வசதிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்ட தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.