பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்க புதிய திட்டத்தைதொடங்கி வைக்கிறார் நிர்மலா சீதாராமன்

பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்க புதிய திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைக்கிறார்.

கடந்த மத்திய பட்ஜெட்டில், நாட்டில் புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்களில், ஏற்கனவே இருக்கும் பொது கட்டமைப்புகளை விற்பனை செய்வதும் ஒன்று என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

அத்துடன், இதற்காக புதிய திட்டம் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். குறிப்பாக, முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும் முதலீட்டாளர்களுக்கு தெரிவுநிலையை வழங்குவதற்கும் ஒரு பணமாக்கல் வழிமுறையை கொண்டு வருவதற்கான திட்டங்களை அவர் அறிவித்திருந்தார்.

அந்தவகையில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்டு உள்ள இந்த என்.எம்.பி. திட்டத்தை நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்தத் திட்டம், தனியார் முதலீட்டாளர்களுக்கு தெரிவுநிலையை வழங்குவதோடு மட்டும் அல்லாமல், அரசின் சொத்து பணமாக்கலுக்கான ஒரு செயல் திட்டமாகவும் இந்த திட்டம் செயல்படும் என்று கூறப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.