வரணியில் இன்று 26 பேருக்குக் கொரோனா உறுதி!

யாழ்., கொடிகாமம், வரணி வடக்கு ஜே/339 கிராமசேவையாள் பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட அதிவிரைவு அன்ரிஜன் பரிசோதனையில் 26 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வட வரணி கறுக்காயில் உள்ள பனை, தென்னை அபிவிருத்தி சபையின் மதுபான வடிசாலையின் பணியாட்களுக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தொற்று ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு பணியாற்றியவர்களது குடும்ப உறுப்பினர்கள், பணியாட்கள் பலருக்குத் தொற்று அதிகரித்து வந்த நிலையில் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று வரணி வடக்கு ஶ்ரீ கணேசா சனசமூக நிலையத்தில் வைத்து 79 பேருக்கான அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 26 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.