வருமானத்தை இழந்துள்ள பஸ் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் தொடக்கம் நிவாரணம் வழங்கல்!

வருமானத்தை இழந்துள்ள பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளது எனப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்குத் தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வாகன உதிரிப்பாகங்கள், பேட்டரிகள், டயர்கள், எண்ணெய் வகைகள் மற்றும் காப்புறுதி, லீசிங் கட்டணங்களுக்கான ஒரு தொகை பணத்துக்குரிய வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.

இதனைத் தவிர, வருமானம் இழந்துள்ள பஸ் ஊழியர்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்குரிய பணத்துக்கான வவுச்சர்களும் வழங்கப்படவுள்ளன.

இந்த நிவாரண செயற்றிட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும்.

இதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்காக தனியார் பஸ்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.