நாட்டை முடக்கி மக்களின் வயிற்றில் அடிக்கமாட்டேன்! – கோட்டாபய உறுதி.

“நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டே செப்டெம்பர் 6ஆம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடித்துள்ளேன். அதற்குப் பின்னரும் ஊரடங்குச் சட்டத்தை நீடித்து அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடும் மக்களின் வயிற்றில் அடிக்கமாட்டேன்.”

இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச உறுதியளித்தார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில், அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடுவோர் மற்றும் வருமானம் குறைந்த மக்கள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு தொடர்பான விசேட கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர்களான பஸில் ராஜபக்‌ஷ, கெஹலிய ரம்புக்வெல, பந்துல குணவர்தன, டலஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, சிசிர ஜயகொடி, ஷன்ன ஜயசுமன, ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, பாதுகாப்புப் பணிக் குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உள்ளிட்ட அதிகாரிகள், கொரோனா ஒழிப்புச் செயலணியின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.