யாழ். போதனாவில் சிகிச்சை பெற்ற மருத்துவர் உட்பட மூவர் கொரோனாத் தொற்றால் சாவு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உட்பட மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் யாழ். கிளையில் மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவர்களில் ஒருவரான நல்லூரைச் சேர்ந்த 72 வயதுடையவரே கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

மேலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாயைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரும், உரும்பிராயைச் சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.