கிளிநொச்சியைச் சேர்ந்த நால்வர் கொரோனாவால் காவு!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், திருச்செல்வம் செல்லம்மா (வயது 82) என்பவர் இன்று உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அவருடைய மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அங்கு அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, செல்லம்மா (வயது 75), எஸ் .ராமர் (வயது 67), மீனாம்பாள் (வயது 87) ஆகிய மூவரும் கொரோனாத் தொற்றால் இன்று உயிரிழந்த நிலையில், அவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.