கொரோனாவால் இளம் யுவதி உட்பட இருவர் இன்று அதிகாலை மரணம்.

யாழ்., பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலை வளாகத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர், பருத்தித்துறையைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் என்றும், மற்றையவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 79 வயதுடைய வயோதிபர் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave A Reply

Your email address will not be published.