தனிவழி செல்லும் சுதந்திரக் கட்சி; புதிய கூட்டணி மலரும் சாத்தியம் பரபரப்புச் செய்தி.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணி அரசியிலிருந்து விலகி, எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தலில் புதிய அரசியல் கூட்டணியாகப் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழு அண்மையில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மக்கள் முன்னணி அல்லது ஐக்கிய முன்னணி என்ற பெயரிலேயே கூட்டணி மலரக்கூடும் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.