குடைசாய்ந்தது லொறி! – சாரதியின் உதவியாளர் படுகாயம்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதி, குடாகம பிரதேசத்தில் லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியின் உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மொரட்டுவையிலிருந்து தலாவக்கலை பூண்டுலோயா நோக்கி, 20 தொன் விறகுகளைக் கொண்டு சென்ற லொறியே இவ்வாறு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்து லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த லொறியில் லொறியின் சாரதி, சாரதியின் உதவியாளர் மற்றும் ஒருவர் பயணித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.