புத்தளத்தில் இரு பொலிஸார் மீது தாக்குதல்!

புத்தளம் மாவட்டம், வனாத்தவில்லுப் பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவரைக் கைதுசெய்வதற்குச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரை, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் தாக்கியதால் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும் வனாத்தவில்லு பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வனாத்தவில்லு பொலிஸுடன் இணைக்கப்பட்டு சேவையாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரைக் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.