ரஞ்ஜன் ராமநாயக்கவை பொது மன்னிப்பில் விடுவிக்குமாறு , எதிர்க்கட்சித் தலைவர் , ஜனாதிபதிக்கு கடிதம்

சிறை தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்து ஜனாதிபதிக்கு அவர் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.

கடந்த 2021 ஜனவரி 12 ஆம் திகதியில் இருந்து ரஞ்சன் ராமநாயக்க சிறை தண்டனை அனுபவித்துவருகின்றார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு இலங்கையில் உள்ள கலைஞர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.