25 வயது இளைஞன் வைத்தியருக்கு முன்பாக விழுந்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்! – கண்டி

கொரோனா தொற்றுக்கு உள்ளான 25 வயது இளைஞன் ஒருவர் வைத்தியருக்கு முன்பாக விழுந்து உயிரிழந்த சம்பவம் கண்டியி வைத்தியசாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி குண்டசாலை மஹமெவ்னா என்ற பிரதேசத்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு இடிப்பு வலி காரணமாக பரிசோதனை செய்துகொள்ள சென்ற இளைஞன் வைத்தியருக்கு முன்பாகவே விழுந்து உயிரிழந்துள்ளார்.

பின்னர் நடாத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், குறித்த இளைஞன் கண்டி கட்டுகஸ்தோட்டையை சேர்ந்தவராக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.