“இதயங்களை ஒன்றிணைக்கும் ஊரின் பாலம்” அடிக்கல் நடும் நிகழ்வு.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் ஐந்தாயிரம் கிராமிய பாலங்களை அமைக்கும் “இதயங்களை ஒன்றிணைக்கும் ஊரின் பாலம்” வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பட்டிப்பளை அம்பிளாந்துறை பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு சனிக்கிழமை இடம்பெற்றது.

கிராமத்தில் வாழும் மக்கள், தமது உற்பத்திப் பொருட்களை இலகுவில் நகர்ப்பகுதிகளுக்கு கொண்டுசென்று சந்தைப்படுத்தவும் மக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையிலும் இந்தக் கிராமிய பாலங்கள் அமைக்கும் பணிகளை ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கத்தின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில், பிரதமரின் தலைமையில், இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாகமுனை பகுதியில் உள்ள பாலத்தின் புணரமைப்பு பணிகளே ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்படவுள்ள குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகளை பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாலத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டிவைத்தார்.

இந்த நிகழ்வில், பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் நா.புஸ்பலிங்கம், பிரதேச சபை உறுப்பினர் வை.சந்திரமோகன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான த.மனோகரன், பா.மதனராஜ் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.