இயந்திர படகு இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பெரியஉப்போடை வாவிக்கரை வீதியில் உள்ள களப்புக்குள் இருந்த படகே
இவ்வாறு இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.அதிகாலை மீன்பிடிக்கச்செல்வதற்காக படகின் உரிமையாளர் வந்தபோது படகு
எரிக்கப்பட்டுள்ளதை கண்டுபொலிஸாருக்கு அறிவித்துள்ளார். படகும் அதனுடன் இருந்த இயந்திரமும் முற்றாகஎரிந்து சாம்பலாகியுள்ளது.

இதன்காரணமாக குறித்த மீனவருக்கு 06 இலட்சம் ரூபா நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.