வவுனியாவில் தடுப்பூசி பெறாத நால்வர் உயிரிழப்பு!

வவுனியாவில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத நான்கு பேர் கொரோனாத் தொற்று காரணமாக நேற்று மரணமடைந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கொரோனாத் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் பலரும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனாத் தொற்று காரணமாக தடுப்பூசி எதனையும் பெற்றுக்கொள்ளாத 32 வயது இளைஞர் உட்பட நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்.

32 வயது இளைஞர் தவிர்ந்த ஏனைய மூவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். குறித்த நான்கு பேரினதும் சடலங்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குச் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.