மருத்துவமனைகளுக்கு ஒரு தொகுதி சுகாதார அங்கிகள் வழங்கி வைப்பு!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை மற்றும் மாங்குளம் ஆதார மருத்துவமனை ஆகியவற்றுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் 400 கொரோனா தடுப்பு சுகாதார அங்கிகள் நேற்று(06) குறித்த மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் லக்சன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் எம்.முகுந்தகஜன், கரைத்துறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.