பராஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு நிதியனுசரணை வழங்கல்.

2020 டோக்கியோ பராஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்த விளையாட்டு வீரர்களுக்கு நிதியனுசரணை வழங்கல்

2020 பராஒலிம்பிக் போட்டிகளில் F46 ஆண்கள் குழுவின் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையைப் பதிவு செய்து தங்கப்பதக்கத்தை தினேஷ் பிரியந்த ஹேரத் அவர்களும், F64 ஆண்கள் குழுவின் ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை சமித்த துலான் அவர்களும் F64 வென்றெடுத்துள்ளதுடன், அதன் மூலம் அவர்கள் தாய்நாட்டுக்கு விசேட வெற்றியை ஈட்டித்தந்துள்ளனர். 1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் நிறுவப்பட்டுள்ள தேசிய விளையாட்டுக்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பணப் பரிசுகளை வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேற்படி வெற்றிகளை ஈட்டித்தந்த விளையாட்டு வீரர்கள் இருவருக்கும் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் இருவருக்கும் தேசிய விளையாட்டுக்கள் சபையின் பரிந்துரைக்கமைய பணப்பரிசு வழங்குவதற்காக விளையாட்டுக்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.