மன்னார் பிரதேச சபையின் தலைவரை ஆளுநர் வீட்டுக்கு அனுப்பினார்

அதிகார துஷ்பிரயோகம் குற்றச்சாட்டில் நாளை (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் மன்னார் பிரதேச சபையின் தலைவர் சாஹுல் ஹமீத் முகமது முஜாஹீரை வடமாகாண ஆளுநர் நீக்கியுள்ளார்.

இதனை வடமாகாண ஆளுநர் மன்மதராஜா சார்லஸ் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் பிரதேச சபையிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

மன்னார் பிரதேச சபையின் தலைவர் மீது கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.