11 பேரை பலியெடுத்த கொரோனா 104 வயது மூதாட்டியும் சாவு.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 104 வயது மூதாட்டி உட்பட மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனாத் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 11 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மரணித்த 11 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா, மூனாமடு கிராமத்தைச் சேர்ந்த குறித்த 104 வயது கதிரவேல் அமிர்தம் என்ற மூதாட்டியே மரணமடைந்தவராவார். வவுனியாவில் அதிகூடிய வயதில் மரணித்த முதலாவது வயோதிபராக இவரே கணிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.