கொடிகாமம் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

யாழ். தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம், இயற்றாலைப் பகுதியைச் சேர்ந்த ராஜன் சிந்துஜன் (வயது 24) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இயற்றாலைப் பகுதியில் நேற்றிரவு 09.30 மணியளவில் குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது , மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.