ருதுராஜ், பிராவோவுக்கு டோனி பாராட்டு.

துபாயில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது.

இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்சுக்கு பதிலடி கொடுத்தது. இந்த சீசனில் டெல்லியில் நடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி மும்பையிடம் தோற்று இருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு காரணமான தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஆல் ரவுண்டர் பிராவோ ஆகியோரை கேப்டன் டோனி பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது

நாங்கள் ஒரு கட்டத்தில் 30 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்தோம். அப்போது ஒரு நல்ல ஸ்கோர் வேண்டும் என்று நாங்கள் 140 ரன் வரை எதிர்பார்த்தோம். ஆனால் 160 ரன் வரை நெருங்கிவிட்டோம். இது மிகவும் பிரமாதமாக இருந்தது.

ருதுராஜ் கெய்க்வாட்டும், பிராவோவும் நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டனர்.

ஆடுகளம் இரண்டு நிலையில் இருந்தது. தொடக்கத்தில் சற்று மெதுவாக இருந்தது. பின் களத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. அம்பர்த்தி ராயுடு காயம் அடைந்தார். அதில் இருந்து மீண்டு வருவது கடினமாக இருந்தது. ஆனால் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஒரு பேட்ஸ்மேன் இறுதி வரை களத்தில் நிற்பது புத்திசாலித்தனமானது.என்று டோனி கூறினார்

Leave A Reply

Your email address will not be published.