லொகான் ரத்வத்தை குறித்து மஹிந்த ராஜபக்ஷ எடுக்கப் போகும் முடிவு என்ன? ; மத்திய குழு கூடவுள்ளது

குடிபோதையில் சிறைச்சாலைக்குள் நுழைந்து கைதிகளை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தே குறித்து முடிவெடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மத்திய குழு கூடவுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அந்த விவாதத்திற்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வருகைக்குப் பின்னர் மத்திய குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, செயலாளர் கூறினார்.

இத்தாலியிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற பிரதமர் இலங்கை திரும்பியுள்ளார். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 309 விமானத்தின் மூலம் இன்று அதிகாலை 12.01க்கு பிரதமர் நாட்டைத வந்தடைந்தார்.

Leave A Reply

Your email address will not be published.