தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 76 ஆயிரம் பேர் இதுவரை கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 509 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 25 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 145ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்துக்குள் உள்நுழையும் மற்றும் வெளியேறும் 13 பிரதேசங்களில் நேற்று தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி 190 வாகனங்களில் வந்த 357 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.