அரசின் அராஜகம் தமிழர்களை ஓரணியில் மீண்டும் அணிதிரள்வதை விரைவுபடுத்தும் சிறிகாந்தா தெரிவிப்பு.

“அடக்குமுறையைப் பிரயோகித்து தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குவதற்கு அரசு தொடர்ந்து முயற்சிப்பது ஒருபோதும் வெற்றி அளிக்காது. பிரிந்து நிற்கும் தமிழ் மக்கள் ஒரு கொடியின் கீழ் மீண்டும் அணிதிரள்வதை அது விரைவுபடுத்தும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பொலிஸாரின் இந்த அராஜகத்தைத் தமிழ்த் தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது எனவும் அவர் மேலும் கூறினார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் எம்.பியின் கைது தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டனத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.