வெண்கல பதக்கத்தை வென்ற இலங்கை விமானப்படையின் குத்துச்சண்டை வீராங்கனை ….

இலங்கை முன்னணி குத்துச்சண்டை வீராங்கனையான பெண் விமானி காயானி களுஆராச்சி 75 கிலோ மகளிருக்கான எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இது போன்ற ஒரு மிக பிரமாண்டமான குத்துச்சண்டை நிகழ்வில் ஒரு இலங்கை பெண் குத்துச் சண்டைவீரர் ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். சர்வதேச விளையாட்டு நிகழ்வில் இலங்கை விமானப்படை மற்றும் நமது தாய்நாட்டுக்கு பெருமை மற்றும் மரியாதை பெற்றுத் தந்த விமானப்படை குத்துச்சண்டை வீராங்கனைக்கு விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பத்திரண மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பெண் விமானி காயானி களுஆராச்சி, 2018 ம் ஆண்டு பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு, 2019 ம் ஆண்டு லேட்டன் கோப்பை குத்துச்சண்டை போட்டி மற்றும் 2019 ம் ஆண்டு கிளிஃபோர்ட் கோப்பை குத்துச்சண்டை போட்டி போன்றவற்றிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிட்டதக்கது.

Leave A Reply

Your email address will not be published.