சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள புதிய நடைமுறை

நாட்டிற்கு வருகைதரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையிலான புதிய வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று வௌிநாட்டிலிருந்து வருகை தரும் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு பயணிகள், விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் பெறப்படும் PCR பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் நாட்டை வந்தடைந்ததும் மீண்டும் PCR பரிசோதனை முன்னெடுக்காமல் சமூகமயப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.