இலங்கையில் நேற்று 893 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம்!

இலங்கையில் 893 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 18 ஆயிரத்து 775 ஆக எகிறியுள்ளது.

அத்துடன் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 597 பேர் குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 58 ஆயிரத்து 85 ஆக அதிகரித்துள்ளது என்று அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.