யாழில் இந்திய வெளியுறவு செயலாளர்!

இந்தியாவின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை பார்வையிட இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று மாலை யாழ்ப்பாணத்துக்கு வந்தார்.

இந்திய வெளியுறவு செயலாளர் நேற்று இலங்கைக்கு வருகை தந்த நிலையில் இன்று மாலை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார்.

இதன்போது யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தைச் சுற்றி பார்வையிட்டார். அவருடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனும் வருகை தந்தார்.

அவரது வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலைய வளாகத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.