‘தாத்தா’வாக ஜனாதிபதி பேத்தியுடன் புகைப்படம்.

எனது பேத்தியை முதன்முறையாக நான் தொட்டுத் தூக்கி அணைத்த அந்தத் தருணம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது என்று அமெரிக்காவிலிருந்து இன்று காலை நாடு திரும்பிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது முகநூலில், பேத்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் இட்டுள்ள பதிவு வருமாறு:-

“அண்மையில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக நான் அமெரிக்கா சென்றபோதுதான், எனது பேத்தியை முதன்முறையாக நேரில் பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றேன்.

எனது மகன் மனோஜ் மற்றும் மருமகள் செவ்வந்தி ஆகியோர் பெற்றோர் என்ற ஸ்தானத்தை அடைந்தமைக்கு அவர்களை நேரில் வாழ்த்தியதோடு ‘தாத்தா’ என்ற ஸ்தானத்தை எனக்குத் தந்தமைக்கு எனது நன்றியையும் கூறினேன்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.