ஐக்கிய மக்கள் சக்தி சர்வதேச நீதிமன்றங்களுக்கு சென்றாலும் தோல்வியே ஏற்படும் – ரணில் விக்ரமசிங்க

ஐக்கிய மக்கள் சக்தி இலங்கையிலுள்ள நீதிமன்றங்களுக்கு மாத்திரமன்றி சர்வதேச நீதிமன்றங்களுக்கு சென்றாலும் அவர்களுக்கு தோல்வி ஏற்படுமென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பதுளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்த ரணில் விக்ரமசிங்க அதற்கு எதிராக ஒரு போதும் தான் நான் வழக்கு பதிவு செய்யவில்லையென குறிப்பிட்டுள்ளார்.

தன்னை நீதிமன்றங்களுக்கு அழைத்து சென்ற போதும் எல்லா நீதிமன்றங்களிலும் தோல்வியே கிடைத்ததனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் மாத்திரமல்ல தேவையென்றால் சர்வதேச நீதிமன்றத்திற்கும் செல்லுமாறு அவர் சவால் விடுத்துள்ளார்.

எங்கு சென்றாலும் ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு தோல்வியே கிடைக்குமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பை எவரும் மாற்றியமைக்க மாட்டார்களென தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் அதே தீர்ப்பையே இரண்டு தடவைகள் மாவட்ட நீதிமன்றங்களும் வழங்கப்பட்டதாக கூறியுள்ளார்.

Comments are closed.