இரத்தக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!

மீரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிம்புலாவல கழிவுநீரோடையிலிருந்து 40 வயது நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.

பிரதேச மக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து, மீரிஹான பொலிஸார் கடற்படையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டுள்ளனர்.

இரத்தக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம், களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மீரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.