தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 115 பேர் சிக்கினார்கள்!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 115 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியைப் பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 80 ஆயிரத்து 475 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.