வவுனதீவு பகுதியில் நான்கு கைக்குண்டுகள் மீட்பு!

மட்டக்களப்பு வவுனதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகாலபோட்டமடு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் நான்கு கைக்குண்டுகள் இன்று (10) திகதி ஞாயிற்றுக்கிழமை பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

வவுனதீவு பொலிசாரிற்கு கிடைத்த தகவலையடுத்து தாண்டியடி விசேட அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.

பெரியகாலபோட்டமடு பிள்ளையார் கோவிலுக்கு பின்புறம் உள்ள வயற்காணியில் விதைப்பிற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை மேற்கொள்ளும் போது கைக்குண்டுகளை கண்ட காணி உரிமையாளர் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த நான்கு கைக்குண்டுகளையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

இந்த 4 கைக்குண்டுகளும் கடந்த யுத்த காலப்பகுதியில் கைவிடப்பட்டவையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், வவுனதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.