இலங்கைக்கு வருகை தந்த சுப்பிரமணிய சுவாமி.

பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்றுக்காலை வந்தடைந்தார்.

அவரை, விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரிமாளிகையில் இன்றுமாலை நடைபெறும் நவராத்திரி விழாவிலும் சுப்ரமணியன் சுவாமி கலந்துகொள்வார்.

அத்துடன், இலங்கை இராணுவத்தின் 72ஆவது நிறைவை​யொட்டி நடத்தப்படும் இராணுவ கருத்தரங்கிலும் அவர் உரையாற்றவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.