கொகெய்ன் உருண்டைகளை விழுங்கிய பெண் கைது!

கொகெய்ன் போதைப்பொருள் அடங்கிய உருண்டைகளை விழுங்கி இலங்கை வந்த உகண்டா பெண்ணொருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

உகண்டாவிலிருந்து இன்று (15) பிற்பகல் இலங்கைக்கு வந்த 45 வயதுடைய குறித்த பெண்ணை – கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது சந்தேகம் ஏற்பட்டதால் அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதன்போது அவர் கொகெய்ன் அடங்கிய 100 உருண்டைகளை விழுங்கி உள்ளதாக குறித்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள், சுங்க திணைக்களத்தின் போதைப்போருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் கையளிக்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.