ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்டம்.

ஏப்ரல் 21 தாக்குதல் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டமையினால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமது அரசியல் காலப்பகுதியில் ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்பட்டதால், அது தனக்கு மிகவும் வருத்தத்தை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தாம் உள்ளதாக மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

கத்தோலிக்க மக்களுக்குத் தாம் மதிப்பும், கௌரவமும் வழங்கி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.