உர தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு.கொடும்பாவி எரிப்பு.

உர தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கொடும்பாவியை எரித்து நுவரெலியாவில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட பயிர்ச்செய்கையாளர்கள் (17) நுவரெலியா நகரத்தில் பிரதான வீதியில் பேரணியாக சென்று தமது போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தில் பெருந்திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.