இராணுவ வாகனத்தில் மண் ஏற்றும் படையினர்! தமக்கு ஏதும் தெரியாது.

யாழ்., வல்வை இராணுவ முகாமின் பாவனைக்கு முன்னால் உள்ள நிலத்தில் இருந்து இராணுவ வாகனத்தில் மண் ஏற்றப்படுகின்றது.

தனியார் மண் ஏற்றுவதையும், மண் கொண்டு செல்வதையும் சோதனையிட்டு பரீட்சித்து அனுமதி இல்லாதுவிடின் கைதுசெய்யும் படையினரே எந்தவிதமான அனுமதியும் இன்றி மண் ஏற்றுகின்றனர்.

இவ்வாறு இராணுவ முகாமுக்கு முன்னால் ஏற்றப்படும் மண் இராணுவ வாகனத்திலேயே ஏற்றப்படுகின்றது.

இது தொடர்பில் தமக்கு ஏதும் தெரியாது என அதிகாரிகள் கைவிரித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.