இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ‘நனோ நைட்ரஜன்’.

நெல் உள்ளிட்ட சகல செய்கைகளுக்காகவும் பயன்படுத்தக்கூடிய ‘நனோ நைட்ரஜன்’ திரவ உரம் இந்தியாவில் இருந்து இன்று அதிகாலை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதற்கமைய, 9 இலட்சம் ஹெக்டர் விவசாய நிலப்பரப்பிற்குத் தேவையான திரவ உரமே நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் முதலாவது தொகுதியாக ஒரு இலட்சம் லீற்றர் ‘நனோ நைட்ரஜன்’ திரவ உரம் ஏற்றிய விமானம் கட்டுநாயக்காவில் தரையிறங்கியது.

அதனை கமநல சேவை மையங்களினூடாக இன்றைய தினம் முதல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம், 31 இலட்சம் லீற்றர் ‘நனோ நைட்ரஜன் திரவ உரம் எதிர்வரும் நாட்களில் நாட்டிற்குக் கொண்டுவரப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.