தீயிட்டுக்கொழுத்தப்பட்ட முச்சக்கர வண்டி : எச்சரிக்கை துண்டுப்பிரசுரம்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மீராவோடைப் பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்று இன்று (புதன்கிழமை) அதிகாலை இனந்தெரியாதோரால் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபள்யூ.எம்.சந்திரகுமார தெரிவித்தார்.

அதிகாலை 03.15 மணியளவில் வெடிப்புச் சத்தத்துடன் ஜன்னல் வழியாக வெளிச்சம் தெரிவதை அவதானித்து வெளியே வந்து பார்க்கும் போது முச்சக்கர வண்டி தீயினால் எரிந்து கொண்டிருப்பதை அவதானித்து உறவினர்களின் உதவியுடன் தீயினை கட்டுபப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தீயினால் முச்சக்கர வண்டி முற்றாகச் சேதமடந்துள்ளதுடன், வீட்டின் முன்பகுதியும் வீட்டிற்கான மின்சாரமும் தடைப்பட்டுள்ளதுடன் வீட்டில் சந்தேக நபர்களால் எச்சரிக்கை செய்து துண்டுப்பிரசுரமொன்றும் வீட்டின் சுவரில் ஒட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.