மூன்றே நாட்களில் கரும்புள்ளியை மறைய……..

பொதுவாக சிலர் முகம் கரும்புள்ளிகள், தழும்புகள் நிறைந்தது அசிங்கமாக காணப்படுவதுண்டு.

இதனை எளிதில் போக்க நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்கள் மட்டுமே போதும். கண்ட கண்ட கிறீம்களை வாங்கி தான் போட வேண்டும் என்ற அவசியமில்லை.

தற்போது மூன்றே நாட்களில் கரும்புள்ளிகளை மறைய செய்யும் அற்புத வழி என்னவென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 1
மாதுளை விதைகள் – 1/2 பௌல்
எலுமிச்சை – 1/2
ஐஸ் ட்ரே – 1
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை நீரில் நன்கு கழுவி, அதன் தோலை சீவி அகற்ற வேண்டும். பின் அதை துருவிக் கொள்ளவும்.

பின் மிக்ஸியில் உருளைக்கிழங்கு, மாதுளை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு கலக்கவும்.

அடுத்து ஐஸ் ட்ரேயில் இந்த கலவையை ஊற்றி நிரப்பி, ஃப்ரீசரில் 5-6 மணிநேரம் வைத்து உறைய வைக்க வேண்டும்.

பிறகு அந்த ஐஸ் கட்டியைக் கொண்டு கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இப்படி ஒரு நாளைக்கு 1-2 ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், மூன்றே நாட்களில் கரும்புள்ளிகள் முற்றிலும் மறைந்துவிடும்.

Leave A Reply

Your email address will not be published.