மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி, 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தீபாவளி நெருங்கியுள்ள நிலையில் இந்த அறிவிப்பால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 2020 ஜூலையில் 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, இந்தாண்டு கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை பரிந்துரைத்ததற்கு, பிரதமர் மோடி அண்மையில் ஒப்புதல் வழங்கினார்.

இந்நிலையில், அகவிலைப்படி 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, 2021 ஜூலை ஒன்றாம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 சதவீத அகவிலைப்படி உயர்வால் 47 லட்சத்து 14 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதனால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 9 ஆயிரத்து 488 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி நெருங்கியுள்ள நிலையில் அகவிலைப்படி உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு போனசாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.