உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

கேகாலையில் ஆணின் சடலம் ஒன்று அடையாளம் காணமுடியாதவாறு உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

எட்டியாந்தோட்டை – மலல்பொல கிராம உத்தியோகத்தர் பிரிவின் அமுஹேன பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது எனப் எட்டியாந்தோட்டைப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த ருவன்வெல்ல பதில் நீதிவான் நிமல் புஸ்பகுமார, மரண விசாரணையை நடத்தியதையடுத்து, கரவனெல்ல வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று எட்டியாந்தோட்டைப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.