எலிக்காய்ச்சல் பாதிப்பு விவசாயிகளுக்கு எச்சரிக்கை!

இறத்தோட்டை பிரதேசத்தில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக இறத்தோட்டை பிரதேச செயலக அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேச செயலகப் பிரிவில் பெரும்போக ஆரம்பக் கட்ட விவசாய நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இதனால் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

எலிக் காய்ச்சலிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கும் சுகாதார பிரிவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள சுமார் 6,000 நோய் தடுப்பு வில்லைகள் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இதனுடன் மேலும் 5,000 தடுப்பு வில்லைகள் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இவற்றை உரிய முறையில் பெற்று விவசாயிகள் தமது கருமங்களை முன்னெடுக்குமாறும் இறத்தோட்டை வைத்திய அதிகாரிகள் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.