பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் முல்லைத்தீவு விஜயம்.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு (30) விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை ஆரத்தழுவி, அங்குள்ள மக்கள் ஆறுதலளித்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நீராவிப்பிட்டி மற்றும் முள்ளியவளை ஆகிய பிரதேசங்களுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் விஜயம் செய்து, அங்கு வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது வயோதிபர்கள், தாய்மார்கள் அவரை வரவேற்று சுகம் விசாரித்ததுடன், அவரின் நல்வாழ்வுக்காக தொடர்ந்தும் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, தான் சிறையில் இருந்தபோது, தனக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தனது நன்றிகளை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.