உலக கோப்பை போட்டியில் இருந்து ஷாகிப் அல் ஹசன் விலகல்

டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட் மற்றும் 1000-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றவர் ஷாகிப் அல் ஹசன்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டியில் குரூப் 1 பிரிவில் வங்காளதேசம் இடம்பிடித்துள்ளது.

அந்த அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது.
இந்நிலையில், வங்காளதேசத்தின் ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக டி20 உலக கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
சமீபத்தில் ஷார்ஜாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் ஷாகிப் அல் ஹசனுக்கு காயம் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.