மஞ்சள் கடத்த முயன்ற மூவர் மன்னாரில் கைது!

தமிழகத்தில் இருந்து மன்னார் கடல்வழியாக மஞ்சள் கடத்த முயன்ற மூவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்பரப்புக்குள் மஞ்சளுடன் உள்நுழைந்த மன்னாரைச் சேர்ந்த ஒரு விசைப்படகில் பயணித்த மன்னார் மீனவர்கள் மூவர் கடற்படையினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 376 கிலோகிராம் மஞ்சளும் கடற்படையினரால் மீட்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.